சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று (29) சம்மாந்துறை புறூட் காடனில் இடம்பெற்றது.

சங்கத்தின் கௌரவ தலைவர் ஐ.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சீ.ஜலால்டீன், தலைமை கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.நிஜாமுடீன், எஸ்.ஜாபீர், சங்கத்தின் கௌரவ இயக்குனர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது சங்கத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி அண்மையில் மரணித்த மர்ஹும்களான எஸ்.ஏ.றாசிக், ஏ.எல்.அப்துல். ரசூல் ஆகியோருக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

கடந்த 2025.07.08ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 03:00 மணிக்கு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிதி நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேந்திரன் அவர்களும் அவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான எம்.சி ஜலால்தீன் அவர்களும் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியபோது